Advertisement

இந்த பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் விநியோகம் தடை

By: vaithegi Tue, 04 Oct 2022 06:38:00 AM

இந்த பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் விநியோகம் தடை

பெரம்பலூர்: தமிழகத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகளின் போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி ஆகியவை நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

electricity supply cut off,perambalur ,மின்சாரம் விநியோகம் தடை ,பெரம்பலூர்

எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூா் பிரிவு ரோடு, சிறுவயலூர் ஆகிய பகுதிகளிலும்

மேலும் குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என அவர் அதில் கூறியுள்ளார்.

Tags :