Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதித்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கு பாராட்டு

கொரோனா பாதித்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கு பாராட்டு

By: Nagaraj Mon, 20 July 2020 6:23:48 PM

கொரோனா பாதித்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கு பாராட்டு

மருத்துவர்களுக்கு பாராட்டு... அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த 19- வயது பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஊத்தங்கரை அடுத்த வடிகண்டனூர்கிராமத்தைச் சார்ந்த 19-வயது பெண் கொரோனா தொற்றால் சிகிச்சைக்கடந்த 11ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

government hospital,krishnagiri,corona patient,childbirth ,
அரசு மருத்துவமனை, கிருஷ்ணகிரி, கொரோனா நோயாளி, சுகப்பிரசவம்

கடந்த ஜுலை 14ஆம் தேதி இவருக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தப்பெண்ணுக்கு இன்று காலை சுகப்பிரசவம் ஆக ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் தாயும் சேயும் நலமுடன் உள்ளனர் எனவும் குழந்தை சராசரி எடையுடன்ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தனர். தமிழகத்திலேயே கொரோனா தொற்று பாதித்த ஒரு பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Tags :