Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை; இலங்கைக்கு 2ம் இடம்

கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை; இலங்கைக்கு 2ம் இடம்

By: Nagaraj Sun, 27 Sept 2020 5:40:29 PM

கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை; இலங்கைக்கு 2ம் இடம்

இலங்கைக்கு 2வது இடம்... கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2வது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான முழுமையான விபரம் அக்டோபரில் வெளியிடப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது.

sri lanka,2nd place,corona,precautions,action ,இலங்கை, 2ம் இடம், கொரோனா, முன்னெச்சரிக்கை, நடவடிக்கை

அதனைத் தொடர்ந்து 2ம் இடத்தில் இலங்கையும் மூன்றாம் இடத்தில் கானாவும், அதையடுத்த தென்கொரியா, மியான்மர், அவுஸ்ரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் 3,349 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளடன் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|