Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும்; பிரேமலதா விஜயகாந்த்

பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும்; பிரேமலதா விஜயகாந்த்

By: Monisha Mon, 09 Nov 2020 6:33:02 PM

பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும்; பிரேமலதா விஜயகாந்த்

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் 9-ந்தேதி கருத்துக்கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 9, 10, 11, 12-ம் வகுப்புகள் உள்ள பள்ளிகளில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

premalatha vijayakand,school,colleges,bjp,dmdk ,பிரேமலதா விஜயகாந்த்,பள்ளி, கல்லூரிகள்,பா.ஜ.க,தேமுதிக

இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று இருப்பதால் பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும். தமிழக பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|