மும்பையில் புறநகர் ரயில்களை இயக்க நடவடிக்கை தயார் நிலை
By: Nagaraj Sat, 29 Aug 2020 08:13:45 AM
வழிகாட்டுதலுக்காக எதிர்பார்ப்பு... மும்பையில் புறநகர் ரயில்களை இயக்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்துள்ள மத்திய ரயில்வே, அரசின் வழிகாட்டுதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
மும்பையில் இன்றியமையாப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர், அரசு அலுவலர்களுக்காக நாள்தோறும் 350 புறநகர் ரயில்களை மத்திய ரயில்வே இயக்கி வருகிறது.
பொதுமக்களுக்கான போக்குவரத்தைத் தொடங்குவதற்காகப் பயணச்சீட்டுகளில்
உள்ள கியூ ஆர் குறியீட்டைக் கண்டறியும் எந்திரங்களை மும்பை சிஎஸ்டி
உள்ளிட்ட 15 நிலையங்களில் நிறுவியுள்ளது.
நுழைவாயில்களில்
வெப்பநிலை கண்டறியும் கருவிகளையும் பொருத்தியுள்ளது. பொதுமக்களுக்கான ரயில்
போக்குவரத்தைத் தொடங்க மாநில அரசு ரயில்வே துறைக்கு வேண்டுகோள்
விடுத்தால், அதை உள்துறைக்கு அனுப்பி நிலைமையை மதிப்பிட்டு அதற்கான
நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை கோட்ட ரயில்வே மேலாளர்
தெரிவித்துள்ளார்.