Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோ வெற்றி

பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோ வெற்றி

By: Karunakaran Mon, 10 Aug 2020 6:20:05 PM

பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோ வெற்றி

பெலாராஸ் நாட்டில் நேற்று அதிபருக்கான பொதுத்தேர்தல் போராட்டங்கள், வன்முறைக்கு இடையே நடைபெற்று முடிந்தது. தேர்தல் முடிந்த உடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் அலெக்சாண்டர் லூகாஷென்கோ 80.23 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்வியாட்லானா சிகானௌஸ்கயா 8.9 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்று பெரும் தோல்வியடைந்தார். அலெக்சாண்டர் லூகாஷென்கோ தொடர்ந்து 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் மோசடி என எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நம்புவதால் அங்கு பதற்றமான சூழ்நி்லை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றிரவு பெலாரஸ் நகரங்களிலும், தெருக்களிலும் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

president alexander lukashenko,win,belarus,general election ,ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, வெற்றி, பெலாரஸ், பொதுத் தேர்தல்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர். 100-க்கு மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து தோல்வியை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சி தலைவர் கூறுகையில், மெஜாரிட்டி எங்களுக்குத்தான். இதை நான் நம்புகிறேன். பேராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை அவமான செயல் என்று கூறினார்.

சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த பின், அலெக்சாண்டர் 26 வருடமாக அதிபராக இருக்கின்றார். தற்போது அலெக்சாண்டர் தேர்தல் முடிவு குறித்தும், போலீசாரின் அடக்குமுறை குறித்தும் இதுவரை பதில் அளிக்கவில்லை.


Tags :
|