- வீடு›
- செய்திகள்›
- சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.. குடியரசு தலைவர்
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.. குடியரசு தலைவர்
By: vaithegi Sun, 06 Aug 2023 09:32:09 AM
சென்னை : பட்டங்களை வழங்குகிறார் ஜனாதிபதி ....சென்னை பல்கலைக்கழகத்தின் 165 -வது பட்டமளிப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரெளபதி முர்மு 2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துஉ ள்ளார். குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் அவர் தமிழகத்திற்கு வருவது இது முறையாகும்.
இதையடுத்து டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் நேற்றூ காலை மைசூர் வந்தடைந்த குடியரசுத் தலைவர், பின் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்றார். அங்கு, ஆஸ்கர் வென்ற 'The Elephant Whisperers' ஆவணப்பட புகழ் யானைக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கரும்பு வழங்கினார்.
அதன் பின்னர், யானைப் பாகன்களோடு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து மைசூர் விமான நிலையம் சென்றடைந்த அவர், விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பின்னர் அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள மைதானத்தில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது. அங்கிருந்து காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புறப்பட்டு செல்லும் அவர், அங்கு நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.