Advertisement

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரை

By: vaithegi Wed, 25 Jan 2023 09:41:23 AM

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரை

புதுடெல்லி: குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரை .... நாடு தனது 74-வது குடியரசு தினத்தை நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடுகிறது. எனவே இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை ஆற்றுகிறார்.

இதையடுத்து இது குறித்து ஜனாதிபதி மாளிகை நேற்று விடுத்த அறிக்கையில், "நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி 25-ந் தேதி இரவு 7 மணிக்கு உரை ஆற்றுகிறார். இதனை அகில இந்திய வானொலி தனது அனைத்து அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்புகிறது.

address by president dravupati ,ஜனாதிபதி திரவுபதி,உரை

இதே போன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்தியிலான இந்த உரையைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூர்தர்ஷன் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் ஜனாதிபதியின் உரையை ஒளிபரப்பும்.

மேலும் அகில இந்திய வானொலியிலும் இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை ஒலிபரப்பாகிறது. ஜனாதிபதி முர்மு பதவி ஏற்ற பிறகு குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.

Tags :