Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ம் தேதி தமிழகம் வர உள்ளார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ம் தேதி தமிழகம் வர உள்ளார்

By: vaithegi Thu, 09 Feb 2023 11:37:18 AM

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ம் தேதி தமிழகம் வர உள்ளார்

இந்தியா : இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வருகிற 18ம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது.

எனவே இதனையொட்டி குடியரசுத் தலைவர் திருபதி முர்மு தமிழகம் வருகை தர இருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 18-ந் தேதி வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

மீனாட்சி அம்மன் கோவில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார்.

இதையடுத்து மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் விமானநிலையம் சென்று கோவை செல்கிறார். அங்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.

Tags :