- வீடு›
- செய்திகள்›
- வரும் ஆக.6ல் சென்னைக்கு வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு
வரும் ஆக.6ல் சென்னைக்கு வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு
By: Nagaraj Mon, 24 July 2023 7:38:08 PM
சென்னை: ஆகஸ்ட் 6-ல் சென்னைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்பட்டார்.
இதை ஏற்று ஜனாதிபதி திரௌபதி முர்மு சென்னை வரும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானநிலையம் சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதி முர்மு சென்னை வர உள்ளார்.