- வீடு›
- செய்திகள்›
- துருக்கி கடற்பரப்பில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் எர்டோகன் அறிவிப்பு
துருக்கி கடற்பரப்பில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் எர்டோகன் அறிவிப்பு
By: Karunakaran Sat, 22 Aug 2020 1:02:55 PM
துருக்கி நாடு தனது நாட்டை சுற்றியுள்ள கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் இயற்கை எரிவாயுவை கண்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் துருக்கி இயற்கை எரிவாயுவை கண்டுபிடிக்கும் பணிக்கு அந்த கடல்பகுதியில் அனைந்துள்ள கிரீஸ் நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டுக்கு சொந்தமான கடல்பரப்பில் சட்டவிரோதமாக இயற்கை எரிவாயுவை கண்டுபிடிக்கும் வேலையில் துருக்கி ஈடுபடுவதாக தொடர்ந்து கிரீஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதனையும் மீறி துருக்கி மத்திய தரைக்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்த துருக்கி முயற்சித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் துருக்கியின் கடல்பகுதியில் உள்ள கருங்கடலில் மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் பேட்டி அளித்தபோது, துருக்கியின் வரலாற்றில் கருங்கடலில் இருந்து மிகப்பெரிய அளவில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 320 பில்லியன் கனமீட்டர்அளவில் இயற்கை எரிவாயு இருப்பதை துருக்கி கப்பல் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், துருக்கி கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இயற்கை எரிவாயு 2023 ஆம் ஆண்டுமுதல் மக்களில் நுகர்வுக்கு வரும். ரூமேனியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கருங்கடலின் மேற்கு பகுதியில் துருக்கியின் ஃபடா கப்பல் கடலில் துளையிடும் பணியை மேற்கொண்டு வந்தது. அப்போது தான் இந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.