Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கம்பஹா மாவட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுற்றுப்பயணம்

கம்பஹா மாவட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுற்றுப்பயணம்

By: Nagaraj Thu, 30 July 2020 6:31:24 PM

கம்பஹா மாவட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுற்றுப்பயணம்

கம்பஹா மாவட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழித்து வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமைகளையும், பெருமைகளையும் பாதுகாக்கக்கூடிய வகையில் களனி நகரத்தை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (வியாழக்கிழமை) கம்பஹா மாவட்டத்திற்கு இரண்டாம் தடவையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், களனி ரஜமகா விகாரை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

to be implemented,the students,the president,the general assembly ,செயற்படுத்துமாறு, மாணவர்கள், ஜனாதிபதி, மகாசங்கத்தினர்

இந்த மக்கள் சந்திப்பை வேட்பாளர் சட்டத்தரணி சிசிர ஜயக்கொடி ஏற்பாடு செய்த நிலையில் பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட ‘பத்தம்ச களனி பிரகடனம்’ சிசிர ஜயக்கொடியால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, கம்பஹா மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களையும் புனர்நிர்மாணம் செய்து வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கும் ஜா-எல நகர அபிவிருத்திக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இதையடுத்து, வேட்பாளர் லலந்த குணசேகர கட்டான, ஆண்டியம்பலம் பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

வருகை தந்திருந்த மகாசங்கத்தினர் அரசாங்கம் முன்னெடுக்கும் ‘சுபீட்சமிகு வீட்டுத் தோட்டம்’ வேலைத் திட்டத்தை பாராட்டியதோடு, அதனை அபிவிருத்தி செய்வதற்காக மக்களை ஆர்வமூட்டுவதற்காக விகாரை மற்றும் மதத் தலங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டார்கள்.

விதைகள் மற்றும் பயிர்ச் செய்கை சம்பந்தமான தகவல்களை வழங்குவதற்கு அனைத்து மதத் தலங்களையும் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர். 20 வயதில் பட்டத்தை நிறைவு செய்வதற்கு ‘சுபீட்சத்தின் நோக்கு’ திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள கல்விக் கொள்கையை உடனடியாக செயற்படுத்துமாறு மாணவர்கள் சிலர் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டனர்.

Tags :