Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குணமடைந்தார் அதிபர் ஜோ பைடன்... வெள்ளை மாளிகை அறிவிப்பு

குணமடைந்தார் அதிபர் ஜோ பைடன்... வெள்ளை மாளிகை அறிவிப்பு

By: Nagaraj Thu, 28 July 2022 5:46:04 PM

குணமடைந்தார் அதிபர் ஜோ பைடன்... வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன்: கொரோனாவில் இருந்து குணமடைந்தார்... அமெரிக்க அதிபர் பைடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ஜோ பைடன் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.

healed,face mask,joe biden,white house,instruction ,குணமடைந்தார், முகக்கவசம், ஜோ பைடன், வெள்ளை மாளிகை, அறிவுறுத்தல்

“அதிபர் ஜோ பைடனுக்கு நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதையடுத்து அதிபர் தனது கடுமையான தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவார். அவருக்கு காய்ச்சல் இல்லை. கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கிவிட்டன,” என்று அதிபரின் மருத்துவர் கெவின் ஓகானர் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் பைடனுக்கு இரு வேளை பரிசோதனை செய்ததில் கொரோனா நெகடிவ் என வந்ததாகவும், இனி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பத்து நாட்களுக்கு முக கவசம் அணிய பைடன் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மற்றபடி பொது வேலைகளை அவர் கவனிப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Tags :
|