Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிபர் ஜோ பைடனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று மீண்டும் உறுதி

அதிபர் ஜோ பைடனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று மீண்டும் உறுதி

By: vaithegi Sun, 31 July 2022 10:46:41 AM

அதிபர் ஜோ பைடனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று மீண்டும் உறுதி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதன் பின் ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார் என்று அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் தெரிவித்தார்.

corona,president joe biden ,கொரோனா ,அதிபர் ஜோ பைடன்

இந்த நிலையில், அதிபர் ஜோ பைடனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று மீண்டும் உறுதியானது. இதனால் மீண்டும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று டாக்டர் குழு தெரிவித்துள்ளது.

Tags :
|