Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் பணிப்புரை

நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் பணிப்புரை

By: Nagaraj Thu, 01 Dec 2022 11:43:32 AM

நிர்மாணப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் பணிப்புரை

கொழும்பு: ஜனாதிபதி பணிப்புரை... சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.


சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் செயற்பாடுகளை தொடர்வது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்று வைத்தியசாலையின் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 ,ஜனாதிபதி, ரணில், பணிப்புரை, வளங்கள், அவசியம், பிரச்சினை

மேலும் இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் மனித வளப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து இதன்போது அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெறும் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போதுள்ள பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags :