ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த அதிபர் டிரம்ப்
By: Nagaraj Wed, 03 June 2020 2:46:20 PM
அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் மாதத்திற்கு ஜி7 மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அப்போது ஜி7 மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இருவரும் கொரோனா தொற்று, சீனாவுடனான எல்லைப் பிரச்சினை ஆகியவை குறித்தும் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜி-7 உச்சி மாநாட்டு பங்கேற்பு நாடுகளை அதிகரிக்க ட்ரம்ப் விரும்புகிறார். இந்தச் சூழ்நிலையில்தான் பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.