Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய தெம்புடன் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப்

புதிய தெம்புடன் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப்

By: Nagaraj Wed, 14 Oct 2020 10:14:50 PM

புதிய தெம்புடன் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப்

புதிய தெம்புடன் இருப்பதாக உணர்கிறேன். நோய் எதிர்ப்பு சக்தி கூடியுள்ளதாக உணர்கிறேன். என்னை ஒரு சூப்பர்மேனாக உணர்கிறேன் என்று தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ள நிலையில் டிரம்ப்பிற்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்கு பின் குணமடைந்து மீண்டும் பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.

பென்சில்வேனியா மாகாணத்தில், டிரம்ப் பேசியதாவது: கொரோனா சிகிச்சைக்குப் பின், நான் புதிய தெம்புடன் இருப்பதாக உணர்கிறேன். நோய் எதிர்ப்பு சக்தி கூடியுள்ளதாக உணர்கிறேன். என்னை ஒரு சூப்பர்மேனாக உணர்கிறேன். சரியான சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

superman,trump,propaganda,corona,treatment ,சூப்பர் மேன், டிரம்ப், பிரசாரம், கொரோனா, சிகிச்சை

அடுத்த அதிபராக ஜோ பிடன் வென்றால், அது சீனாவுக்கான வெற்றியாக இருக்கும். மற்ற சில நாடுகளின் வெற்றியாக இருக்கும். அதன்பின், இந்த நாட்டில், இடதுசாரி பயங்கரவாதத்தின் ஆட்சி தான் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிப ர் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி, மெலனியாவுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாக, ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து, டிரம்ப் மீண்டும் பிரசாரத்துக்கு திரும்பிவிட்டார். ஆனால், மெலனியா குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை. பிரசார கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் குறித்த எந்த செய்திகளும் வெளியாகவில்லை.

Tags :
|
|