Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டிரம்ப் ஏற்றுக்கொள்வார் - வெள்ளை மாளிகை

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டிரம்ப் ஏற்றுக்கொள்வார் - வெள்ளை மாளிகை

By: Karunakaran Sat, 26 Sept 2020 7:09:55 PM

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டிரம்ப் ஏற்றுக்கொள்வார் - வெள்ளை மாளிகை

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பல மாகாணங்களில் தபால் மூலம் வாக்களிக்கக் கோரி வருகின்றனர். தபால் வாக்குகளில் ஏமாற்று வேலைகள் நடப்பதாக குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளித்த பேட்டியில், நான் வாக்களிக்கும் முறை குறித்து கடுமையான புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். அது மோசமான ஒன்று. எனவே தேர்தலில் தோல்வியுற்றால் அமைதியான முறையில் பதவி விலகப்போவதில்லை என்று கூறினார். இது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

president trump,fair election,results,white house ,ஜனாதிபதி டிரம்ப், நியாயமான தேர்தல், முடிவுகள், வெள்ளை மாளிகை

தற்போது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டிரம்ப் ஏற்றுக்கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்கானி கூறுகையில், சுதந்திரமான நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி, ஏற்றுக்கொள்வார் என்று தெரிவித்தார்.

மேலும் அவர், உங்கள் கேள்வி ஜனநாயக கட்சி இடம் கேட்கப்படுவது மிகவும் பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஏற்கனவே தேர்தல் முடிவுகளை ஏற்கமாட்டோம் என பலமுறை தெரிவித்துள்ளனர் என்று கூறினார். தேர்தலையொட்டி அமெரிக்காவில் தீவிரமாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

Tags :