Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனாதிபதி, துணை ஜனாதிபதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை

By: vaithegi Tue, 16 Aug 2022 09:49:25 AM

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 3 முறை நாட்டின் பிரதமர் பதவியை வகித்த பெருமைக்கு உரியவர். கடந்த 1996-ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற அவரது ஆட்சி 13 நாட்களில் கவிழ்ந்தது. அதன்பின் 1998 முதல் 1999 வரையிலான 13 மாதங்களுக்கு மீண்டும் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

இதையடுத்து இதன் பின்பு 3-வது முறையாக 1999-ம் ஆண்டு பிரதமர் பதவியேற்ற வாஜ்பாய் தனது பதவி காலம் முழுவதும் நிறைவு செய்துள்ளார். பா.ஜ.க.வை சேர்ந்த அவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி தனது 93 வயதில் காலமானார். அவரது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

prime minister vajpayee memorial,president,vice president , பிரதமர் வாஜ்பாய் நினைவிடம்,ஜனாதிபதி, துணை ஜனாதிபதி

எனவே இதை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள சதைவ் அடல் நினைவிடத்தில், நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் இதேபோல மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளான நமீதா கவுல் பட்டாச்சார்யாவும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags :