சவூதியில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை மீட்டு வர ஜனாதிபதி உத்தரவு
By: Nagaraj Thu, 05 Nov 2020 09:57:41 AM
சவூதியில் இருந்து 48 இலங்கையர்களை உடனே அழைத்து வர ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை 48 மணிநேரத்திற்குள் நாட்டிற்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இடம்பெற்ற சிறப்புப் பணிக் குழுவின்
கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொரோனா
வைரஸைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும்,
இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா
வைரஸ் பரவலினால் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்கள் வதிவிட மற்றும்
தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதுடன் பல்வேறு இன்னல்களுக்கும் முகம்
கொடுத்துள்ளனர். அந் நாட்டின் 150 பாதுகாப்பு இல்லங்களில் இவர்கள்
தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.