Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் இன்று தொடக்கம்

சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் இன்று தொடக்கம்

By: vaithegi Sun, 24 Sept 2023 10:04:32 AM

சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் இன்று தொடக்கம்

சென்னை: நாடு முழுவதும் பல நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு கொண்டு வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி- சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரயில் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதனையடுத்து நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.50 மணிக்கு எழும்பூர் வந்தடையும் வகையிலும், சென்னை எழும்பூரிலிருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடையும் வகையிலும் இயக்கப்படவுள்ளது.

prime minister,vande bharat railway service,chennai,nellie ,பிரதமர் , வந்தே பாரத் ரயில் சேவை,சென்னை,நெல்லை

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் இயக்கப்படவுள்ளது. சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

இந்நிலையில், சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக சென்னை-நெல்லை இடையிலான வந்த பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் சென்னை-நெல்லை உட்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க இருக்கிறார்.

Tags :