அவசர கால சட்டம் பயன்படுத்துவது குறித்த விசாரணையில் பிரதமர் ஜஸ்டின் சாட்சியம்
By: Nagaraj Sat, 26 Nov 2022 9:54:03 PM
கனடா: கனடாவின் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து விசாரிக்கும் விசாரணைக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஜரானபோது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சாட்சியம் அளித்தார்.
தடுப்பூசி ஆணைக்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பொலிஸ்துறையினரிடம் சரியான திட்டம் இருப்பதாக தாம் உணரவில்லை என்றும் அவர் இதன்போது கூறினார். போராட்டங்கள் வன்முறை அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், எதிர்ப்பாளர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதே தனது இலக்கு என்றும் விசாரணையில் அவர் கூறினார்.
பொது ஒழுங்கு அவசர ஆணையத்தின் ஆறு வார விசாரணைகளில் சாட்சியமளிக்கும்
இறுதி நபர் ட்ரூடோ ஆவார், இது அவரது அரசாங்கம் சட்டத்தை செயல்படுத்துவதில்
நியாயமானதா என்பதை ஆராய்கிறது.
முன்னதாக, கடந்த
ஆறு வாரங்களாக பொலிஸ், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் எதிர்ப்பாளர்கள்
உட்பட டஸன் கணக்கான சாட்சிகளிடம் இந்த குழு விசாரணை நடத்தியுள்ளது.