Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரித்தானியாவிற்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

பிரித்தானியாவிற்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

By: Nagaraj Sun, 18 Sept 2022 4:41:26 PM

பிரித்தானியாவிற்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா: காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்குபற்றுவதற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்றைய தினம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மன்னர் சார்லஸை சந்தித்துள்ளார். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பஹாமஸ் உள்ளிட்ட நாடுகளின் அரச தலைவர்களும் மன்னர் சார்ள்ஸை சந்தித்துள்ளதாக அரச குடும்ப வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் மகாராணிக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

canada,king charles,meeting,obituary,heads of state,participation ,கனடா, மன்னர் சார்லஸ், சந்திப்பு, இரங்கல், அரச தலைவர்கள், பங்கேற்பு

மேலும், இரங்கல் புத்தகத்தில் பிரதமர் தனது இரங்கல்களை வெளியிட்டுள்ளார். மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பிரதமர் ட்ரூடோ உள்ளிட்ட பல அரச தலைவர்கள் பங்குகொள்ள உள்ளனர்.

கனடாவின் ஆளுனர் நாயகம், பழங்குடியினத் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|