Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுகாதார தரப்பு அதிகாரிகளுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு

சுகாதார தரப்பு அதிகாரிகளுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு

By: Nagaraj Fri, 11 Dec 2020 10:06:48 AM

சுகாதார தரப்பு அதிகாரிகளுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு

சந்திப்பு நிகழ்ச்சி... கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார். இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலில் வைரஸ் சுமார் 36 நாட்களுக்கு தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது பிரதமரிடம் அறிவித்தனர்.

meeting,prime minister,ministers,ministry of health ,சந்திப்பு, பிரதமர், அமைச்சர்கள், சுகாதார அமைச்சு

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதமர், சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,அதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு அங்கு வருகைத் தந்திருந்த முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னிஆராச்சி, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :