Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்த மாதத்தில் சந்திக்க உள்ளனர்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்த மாதத்தில் சந்திக்க உள்ளனர்

By: Karunakaran Tue, 03 Nov 2020 09:20:51 AM

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இந்த மாதத்தில் சந்திக்க உள்ளனர்

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த 6 ஆண்டுகளில் 18 தடவை நேரில் சந்தித்துள்ளனர். பிரதமர் மோடி, சீனாவில் சியான், சியாமென், உகான் ஆகிய நகரங்களில் ஜின்பிங்கை சந்தித்து பேசியுள்ளார். சீன அதிபர் ஜின்பிங்கும் இந்தியாவுக்கு வந்து ஆமதாபாத், மாமல்லபுரம் ஆகிய நகரங்களில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

இவர்களது சந்திப்புகளுக்கு பிறகு, கிழக்கு லடாக்கில் சீன படைகளின் அத்துமீறல் முயற்சியால், இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இம்மாதத்தில் மட்டும் 3 தடவை காணொலி காட்சி மூலம் சந்தித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

modi,xi jinping,china,india ,மோடி, ஜி ஜின்பிங், சீனா, இந்தியா

வருகிற 10-ந் தேதி, காணொலி காட்சி மூலம் ரஷியா நடத்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடக்கிறது. அதில், இருவரும் சந்திப்பார்கள் என்று தெரிகிறது. இரண்டாவதாக, வருகிற 17-ந் தேதி, காணொலி காட்சி மூலம் ரஷியா நடத்தும் ‘பிரிக்ஸ்’ மாநாடு நடக்கிறது. அதிலும் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவதாக, வருகிற 21 மற்றும் 22-ந் தேதிகளில், காணொலி காட்சி மூலம் சவுதி அரேபியா நடத்தும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடக்கிறது. அதிலும், இரு தலைவர்களும் சந்திப்பார்கள் என்று தெரிகிறது. இருப்பினும் இந்த மாநாடுகள் குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. மேலும், வருகிற 13 முதல் 15-ந் தேதிவரை நடக்கும் இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

Tags :
|
|