இந்தியா வந்தடைந்தார் பிரதமர் மோடி
By: vaithegi Sat, 17 Sept 2022 07:14:30 AM
சமர்கண்ட்: மாநாட்டில் பங்கேற்று விட்டு இந்தியா வந்தடைந்தார் பிரதமர் மோடி ... ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் எட்டு நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.
எனவே அதன்படி, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இதனிடையே, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது.
இதனை அடுத்து இதில், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டிற்கு பின் பிரதமர் மோடி, ரஷிய அதிபர், துருக்கி அதிபர் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதை தொடர்ந்து நள்ளிரவு உஸ்பெகிஸ்தான் சமர்கண்ட் நகரில் இருந்து பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். இதனையடுத்து இந்த நிலையில், உஸ்பெகிஸ்தானில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று 2 மணியளவில் இந்தியா வந்தடைந்தார்.