Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

By: vaithegi Mon, 06 Feb 2023 1:25:26 PM

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

இஸ்தான்புல்: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் .... துருக்கி- சிரியா எல்லையில் அதிகாலையில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதையடுத்து இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

prime minister modi,earthquake ,பிரதமர் மோடி,நிலநடுக்கம்

அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்நிலநடுக்கத்தால் இதுவரை மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நிலநடுக்கத்தில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். துருக்கி நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டு உடைமைகள் சேதமடைந்துள்ளது வேதனை தருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :