Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விநாயகர் சதுர்த்தி .. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்து தெரிவிப்பு

விநாயகர் சதுர்த்தி .. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Wed, 31 Aug 2022 09:55:22 AM

விநாயகர் சதுர்த்தி ..  நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்து தெரிவிப்பு

இந்தியா: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சதுர்த்தி தினத்தன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவார்கள். மேலும் அதே போல நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள், விநாயகர் ஆலங்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கும்.

இதனை அடுத்து இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், "விநாயகர் சதுர்த்தி திருநாளில் கருணை மற்றும் சகோதரத்துவம் எப்போதும் மேலோங்கட்டும்.

prime minister modi,vinayagar chaturthi ,பிரதமர் மோடி ,விநாயகர் சதுர்த்தி

ஞானம் என்பது முக்தியை விரும்புபவருக்கு அறியாமையை அழிப்பதாகும். செல்வம் பக்தனுக்குத் திருப்தி அளிக்கிறது. யாரிடமிருந்து தடைகள் அழிகிறதோ, யாரிடமிருந்து காரியம் நிறைவேறுகிறதோ, அந்த விநாயகரை எப்போதும் கும்பிட்டு வணங்குகிறோம்.

மேலும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகப் பெருமானின் அருள் எப்போதும் நம் மீது இருக்கட்டும்." என அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :