Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்து 23 ஆயிரம் பேர் மீட்பு

மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்து 23 ஆயிரம் பேர் மீட்பு

By: Nagaraj Mon, 08 May 2023 10:30:21 AM

மணிப்பூரில் கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்து 23 ஆயிரம் பேர் மீட்பு

மணிப்பூர்: 23 ஆயிரம் பேர் மீட்பு... மணிப்பூரில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை பொதுமக்கள் சுமார் 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, இராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில், டிரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

manipur,civilian,rescue,military camp,accommodation ,மணிப்பூர், பொதுமக்கள், மீட்பு, ராணுவ முகாம், தங்கவைப்பு

அதேநேரம், சுராசந்த்பூர் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை ஊரடங்கில் சிறிது தளர்வளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கடைகளில் இருந்து வாங்கிச்சென்றனர். பெட்ரோல் பங்குகளில் வெகுநேரம் காத்திருந்து நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுச் சென்றனர்.

Tags :
|