டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றினார்
By: Nagaraj Sat, 15 Aug 2020 08:02:07 AM
நாடு முழுவதும் 74 வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்.
இன்று காலை டெல்லி செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வருகை வருகை புரிந்தார். அவரை பிரதமரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்றார்
தொடர்ந்து முப்படை வீரர்கள் பிரதமருக்கு அணிவகுப்பு மரியாதை செய்தனர். தொடர்ந்து செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார். சுதந்திர தின விழாவில் பிரமுகர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர். மேலும் தனிநபர் இடைவெளியுடன் பிரமுகர்கள் அமர்ந்துள்ளனர்.
விழாவில் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா
அச்சுறுத்தலை தொடர்ந்து சுதந்திர தின விழாவை கொண்டாட மத்திய அரசு பல்வேறு
வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அவற்றை பின்பற்றுமாறு மாநில அரசுகளை
கேட்டுக்கொண்டு உள்ளது.
சுதந்திர தினவிழாவை யொட்டி, அசம்பாவித
சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டு உள்ளன. டெல்லியில் விமானநிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில்
கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
டெல்லியில்
சட்டம்-ஒழுங்கு பணியை உறுதி செய்ய பல்வேறு பகுதிகளிலும் போலீசார்
குவிக்கப்பட்டுள்ளதோடு, அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையும்
நடத்தப்பட்டு வருகிறது.