ராஷ்ட்ரிய ஸ்வாசதா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
By: Karunakaran Sat, 08 Aug 2020 6:53:44 PM
பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்தார். இந்த திட்டம் மூலம் இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான மக்கள், திறந்த வெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கும் போக்கை விடுத்து, கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளனர்.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் டெல்லியில் ராஷ்ட்ரிய ஸ்வாசதா கேந்திரா என்ற பெயரில் தேசிய தூய்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா என்ற தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மகாத்மா காந்தியின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேசிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின், ராஜ் காட் அருகே அமைந்துள்ள ஆர்.எஸ்.கே சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
அதன்பின் பிரதமர் மோடி 36 பள்ளி மாணவர்களுடன், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவது குறித்து கலந்துரையாடி வருகிறார். அப்போது பேசிய அவர், நாம் அனைவரும் இப்போது ஒரு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். இங்குள்ள குழந்தைகள் உட்பட நாம் அனைவரும் சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றி முகமூடிகளை அணிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மாணவர்களிடம் கூறினார்.