பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா வந்தடைய உள்ளார்
By: vaithegi Sat, 17 Sept 2022 06:53:34 AM
சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம்எட்டு நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.
இதனை அடுத்து அதன்படி, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் போன்ற 8 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கு இடையே, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது.
இதையடுத்து இதில், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு பின் பிரதமர் மோடி, ரஷிய அதிபர், துருக்கி அதிபர் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். உஸ்பெகிஸ்தான் சமர்கண்ட் நகரில் இருந்து விமானம் மூலம் நள்ளிரவு புறப்பட்டார். அவர் இன்று அதிகாலை இந்தியா வந்தடைய உள்ளார்.