வாரணாசியில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
By: Nagaraj Mon, 09 Nov 2020 7:53:21 PM
மேம்பாட்டு திட்டங்கள்...வேளாண்மை, சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் பயனாளிகள் சிலருடன் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார். இந்நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.
இந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ 614 கோடி என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ராம்நகரில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை மேம்பாடு,
கழிவுநீர் தொடர்பான பணிகள், பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான
உள்கட்டமைப்பு வசதிகள், சம்பூர்நந்த் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கான வீட்டு
வளாகம், பல்நோக்கு விதை களஞ்சியசாலை மற்றும் சாரநாத் லைட் அண்ட் சவுண்ட் ஷோ
ஆகியவை இன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியின்
போது, தஷாஷ்வமேத் காட் மற்றும் கிட்கியா காட் ஆகியவற்றின்
மறுவடிவமைப்பு, பிஏசி போலீஸ் படையினருக்கான உபகரணங்கள், கிரிஜா தேவி
சமஸ்கிருத சங்குலில் பல்நோக்கு மண்டபத்தை மேம்படுத்துதல், நகரத்தில்
சாலைகள் பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் சுற்றுலா இடங்களின் வளர்ச்சி
உள்ளிட்ட திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.