Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

By: Monisha Sat, 25 July 2020 10:24:24 AM

ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்!

பல வருடங்களுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த வருடத்தில் அனுமதி அளித்தது. இதனையடுத்து ராமர் கோவில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கின. மார்ச் மாதம் ராமர் சிலை வைக்கப்படும் இடத்தை தேர்வு செய்து அங்கு பூஜை செய்யப்பட்டது. அதன்பின்னர், கட்டுமானப் பணியை தொடங்க ஏதுவாக, சிலை கூடாரத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுமானப் பணி ஆகஸ்ட் 5ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியை தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் பாஜக மற்றும் விஎச்பி அமைப்பின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ram temple,construction,foundation,prime minister modi ,ராமர் கோவில்,கட்டுமானப் பணி,அடிக்கல்,பிரதமர் மோடி

இந்நிலையில், இன்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி சென்று, ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கான ஆயத்தப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேலும், பூமி பூஜைக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனித தலங்களில் இருந்து மண் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1988ல் ராமர் கோவிலின் வடிவமைப்பு திட்டமிடப்பட்டது. அப்போது 141 அடியில் கோவில் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. தற்போது பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு வடிவமைப்பு திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட வடிவமைப்பின்படி, கோவிலின் உயரம் 141 அடியிலிருந்து, 161 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கட்டுமான பணிகள் சுமார் 3.5 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags :