Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடி என்னை பாராட்டினார் - டொனால்ட் டிரம்ப்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடி என்னை பாராட்டினார் - டொனால்ட் டிரம்ப்

By: Karunakaran Mon, 14 Sept 2020 4:10:58 PM

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடி என்னை பாராட்டினார் - டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு மத்தியில் வருகிற நவம்பர் 3-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 2 மாதமே இருக்கும் நிலையில் அதிபர் டிரம்ப் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள சில முக்கிய மாகாணங்களில் டிரம்பின் செல்வாக்கு சரிந்து வருகிறது.

இதனால் நேவாடா பகுதிகளில் அதிபர் டிரம்ப் அதிக நேரத்தை செலவிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேவாடாவின் ரெனோ பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், இந்தியாவை விட அதிகம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து உள்ளோம். கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. நாங்கள் இந்தியாவை விட 44 மில்லியன் பரிசோதனைகளை அதிகமாக செய்துள்ளோம் என்று கூறினார்.

prime minister modi,corona prevention,donald trump,america election ,பிரதமர் மோடி, கொரோனா தடுப்பு, டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா தேர்தல்

பிரச்சாரத்தில் பேசிய அதிபர் டிரம்ப், அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்து கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மோடி எனக்கு போன் செய்து என்னை பாராட்டினார். அமெரிக்காவில் அதிக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது தொடர்பாக மோடி கூறிய கருத்து ஊடகங்களுக்கு விளக்கப்பட வேண்டும். இது தொற்று நோயை நாம் கையாண்ட விதத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் என்று கூறினார்.

மேலும் அவர், ஜோபிடன் பொறுப்பில் இருந்திருந்தால் கொரோனா வைரசுக்கு இன்னும் நூறாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறந்து இருப்பார்கள். ஜோபிடன் நம் நாட்டை வன்முறை கும்பலிடம் ஒப்படைக்க விரும்புகிறார். ஜோபிடன் வென்றால் சீனா வெற்றி பெற்று விடும். ஜோபிடன் வென்றால் அராஜகவாதிகள் வெற்றி பெற்று விடுவார்கள். இது ஒரு மோசமான தேர்தல் என்று தெரிவித்தார்.

Tags :