ஜகார்த்தா சென்றடைந்தார் பிரதமர் மோடி
By: vaithegi Thu, 07 Sept 2023 10:00:17 AM
ஜகார்த்தா : பிரதமர் இந்தோனேசியாவில் நடைபெறும் ‘ஏசியான்’ கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜகார்த்தா சென்றடைந்தார் .... இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் 20-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடும் , கிழக்கு ஆசியா உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.
இதையடுத்து இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியிலிருந்து விமான மூலம் புறப்பட்டார். இன்று அதிகாலை 3 மணி அளவில் பிரதமர் மோடி விமான நிலையத்தில் ஜகார்தா விமான நிலையத்தில் நிலையத்தை சென்றடைந்தார்.
இந்த நிலையில் ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா தலைநகர் ஜகாத்தா சென்றடைந்த, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியை இந்தோனேசிய வாழ் இந்தியர்களும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு மேளம் தாளம் முழங்க வரவேற்றனர். மாநாடு முடிந்த உடன் இன்று காலை 11 45 மணிக்கு மீண்டும் விமான மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்