நாளை வாரணாசியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார் பிரதமர் மோடி
By: Nagaraj Thu, 21 Sept 2023 2:28:46 PM
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் நாளை மறுநாள் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக கஞ்சாரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களை பாஜகவினர் திரட்டி வருகின்றனர். வீடு வீடாகப் போய் பிரதமர் மோடியின் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
23ம் தேதி பிரதமர் மோடி வாரணாசியின் கஞ்சாரி பகுதியில் புதிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் வாரணாசி நகருக்கு வந்து அங்கு ருத்ரக்சா சர்வதேச மாநாட்டு மையம் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.
Tags :
people |
call |
pm modi |
varanasi |