- வீடு›
- செய்திகள்›
- இன்று பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
இன்று பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
By: vaithegi Sun, 28 May 2023 10:15:59 AM
இந்தியா: இன்று பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது. இதையடுத்து இதில் முக்கியமாக லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் வைக்கப்படயிருக்கிறது.
இதன் இடையில், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கை அருகில் செங்கோல் வைக்கப்படுகிறது.
இந்த செங்கோலுக்கு வரவேற்பு இருந்தாலும், எதிர்ப்புகளும் இருந்துகொண்டு வருகிறது. புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25 கட்சிகள் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க விழாவை புறக்கணிக்க 20 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதனை தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில், சிறப்பு வாய்ந்த 75 ரூபாய் நாணயத்தை நிதி அமைச்சகம் வெளியிடவுள்ளது.
இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்த நினைவு நாணயம் பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்படுகிறது.