பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம் மேற்கொள்கிறார்
By: vaithegi Mon, 26 Sept 2022 6:05:45 PM
இந்தியா : ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சி ஜப்பான் அரசு சார்பில் 27-ம் தேதி டோக்கியோவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கெற்க உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில், ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தின்போது அந்த நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்துப் பேச உள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்தநிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று இரவு நான் டோக்கியோவுக்குச் செல்கிறேன்,
பிரதமர் கிஷிடா மற்றும் திருமதி அபே ஆகியோருக்கு அனைத்து இந்தியர்களின் சார்பாக இதயப்பூர்வமான இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.