Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி

வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி

By: vaithegi Thu, 06 Apr 2023 1:01:55 PM

வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர்  மோடி

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 8 மற்றும் 9 -ஆம் தேதிகளில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா , தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குச் செல்கிறார். கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தெலுங்கானாவில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதன் இடையில், வரும் ஏப்ரல் 8- ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி பல திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். மயிலாப்பூர் விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார்.

pm modi,karnataka and telangana,tamil nadu ,பிரதமர்  மோடி , கர்நாடகா மற்றும் தெலுங்கானா , தமிழ்நாடு

அதன்பின், பல்லாவரம் பகுதியில் பொதுமக்களை சந்திக்கிறார். அதன் பிறகு ஏப்ரல் 9 -ஆம் தேதி கர்நாடகாவிற்கு செல்கிறார். கர்நாடகா சுற்றுப்பயணத்தின் போது, மோடி பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கும், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் செல்கிறார்.

‘புலிகளின் 50 ஆண்டுகளின் நினைவேந்தல்’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதோடு, புலிகள் சரணாலயம், யானைகள் முகாமை பார்வையிடுகிறார். மேலும் முதுமலை ஆஸ்கர் தம்பதிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

Tags :