Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மறு சுழற்சி பொருட்களால் தயாரான கோட் அணிந்து வந்த பிரதமர் மோடி

மறு சுழற்சி பொருட்களால் தயாரான கோட் அணிந்து வந்த பிரதமர் மோடி

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:52:47 AM

மறு சுழற்சி பொருட்களால் தயாரான கோட் அணிந்து வந்த பிரதமர் மோடி

டெல்லி: மறு சுழற்சி பொருட்களால் தயாரான கோட்... பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நீல நிற கோட் அணிந்திருந்தார். மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட கோட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்தியன் ஆயில் நிறுவனம் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து சீருடைகளை தயாரித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இந்திய எரிசக்தி வார தொடக்க விழாவில் பிரதமர் மோடி இந்த சீருடைகளை வெளியிட்டார்.

bottles,modi,recycle, ,இந்தியன் ஆயில் நிறுவனம், பெட் பாட்டில், மோடி

இதன்போது, இந்தியன் ஆயில் நிறுவனம், பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களால் தயாரிக்கப்பட்ட நீல நிற கோட் ஒன்றை பிரதமருக்கு பரிசாக அளித்தது. இதனை அணிந்து கொண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மோடி இதை அணிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் தனது ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக 10 கோடிக்கும் அதிகமான பெட் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் பணியில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Tags :
|