- வீடு›
- செய்திகள்›
- டெல்லியில் பாஜக சார்பில் மிகப்பெரிய லட்டு வைத்து பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்
டெல்லியில் பாஜக சார்பில் மிகப்பெரிய லட்டு வைத்து பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்
By: Karunakaran Thu, 17 Sept 2020 1:07:14 PM
பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுதால் நாடு முழுவதும் பாஜகவினர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் உள்பட பலர் டுவிட்டரில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். மேலும், ரஷிய அதிபர் புதின், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி உள்ளிட்ட உலக தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் பாஜக சார்பில் மிகப்பெரிய லட்டு வைத்து, பிறந்தநாள் விழா நடைபெற்றபோது, கட்சி தலைவர் ஷியாம் ஜாஜு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பலர் பங்கேற்றனர். பின்னர் அந்த மெகா லட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும், டெல்லியில் இன்று காலை சைக்கிள் பேரணி நடைபெற்றது. பாஜக எம்பி அர்ஜுன் சிங் பேரணியை துவக்கி வைத்தார்.
மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14 தொடங்கிய இந்த சேவை வாரம் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகளில் பாஜக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.