பிரதமர் மோடியின் கடித தொகுப்பு புத்தகம் இன்று வெளியீடு
By: Nagaraj Thu, 17 Sept 2020 09:49:06 AM
இன்று வெளியிடப்படுகிறது... பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இன்று ஆங்கில புத்தகமாக வெளியிடப்படுகிறது.
மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு நிறைய கடிதங்கள் எழுதி இருந்தார். அந்த கடிதங்கள் அனைத்தும் சோமைய்யா என்பவர் மூலம் தொகுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு கடித தொகுப்பு குஜராத் மொழியில் புத்தகமாக
வெளியிடப்பட்டது. அந்த குஜராத்தி புத்தகம் ஆங்கிலத்தில் மொழி
பெயர்க்கப்பட்டு உள்ளது.
இன்று பிரதமர் மோடிக்கு 70-வது
பிறந்தநாளாகும். இதையொட்டி மோடி, தனது தாய்க்கு எழுதிய கடிதங்களின்
தொகுப்பு ஆங்கில புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது.
‘லெட்டர்ஸ் டூ மதர்’ என்று அந்த புத்தகத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது.
Tags :
book |