Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்

2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்

By: vaithegi Mon, 15 Aug 2022 09:21:20 AM

2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்

டெல்லி: நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திர தினம் கிடைத்தது. இதை அடுத்து இன்று உடன் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே இதனை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது.

அசாதி கா அமிர்த் மஹோத்சவ் என்ற பெயரில் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி வந்தது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், மிகுந்த கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

prime minister narendra modi,red fort,delhi ,பிரதமர் நரேந்திரமோடி,செங்கோட்டை,டெல்லி

இந்த நிலையில் சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார்.

இதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக, டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பின் விமானப்படை ஹெலிக்காப்டர் மூலம் தேசியக்கொடி மீது மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

Tags :