Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் ட்ரூடோ இல்லப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தவர் கைது

பிரதமர் ட்ரூடோ இல்லப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தவர் கைது

By: Nagaraj Sat, 04 July 2020 8:08:13 PM

பிரதமர் ட்ரூடோ இல்லப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்தவர் கைது

ஆயுதங்களுடன் நுழைந்தவர் கைது... பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஒட்டாவாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆளுநர் ஜூலி பேயட்டின் குடியிருப்புகள் உள்ளன. இந்த ரைடோ ஹாலின் நுழைவு வாயில் கதவை பிக்கப் வாகனம் கொண்டு மோதி சேதப்படுத்திய நபர், வளாகத்துக்குள் நுழைந்து பிரதமர் ட்ரூடோ குடியிருப்பு நோக்கி சென்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

arms,infiltrator,prime minister ,ஆயுதங்கள், அத்துமீறி நுழைந்தவர், பிரதமர்

குறித்த நபர் ஆயுதப்படையை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரின் மேற்படி விபரங்கள் தெரியாத நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தனது வேலையை இழந்ததற்காக பிரதமர் ஜஸ்டினிடம் விரக்தியை வெளிப்படுத்த அவர் குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

ஆனால், விபத்து நடந்தபோது ஜஸ்டின் ட்ரூடோ அங்கு இருக்கவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Tags :
|