Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தடுப்பூசி கண்டறியப்பட்டால் அனைத்து நாடுகளுக்கும் சமமாக வழங்க பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தல்

தடுப்பூசி கண்டறியப்பட்டால் அனைத்து நாடுகளுக்கும் சமமாக வழங்க பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தல்

By: Nagaraj Fri, 17 July 2020 6:00:02 PM

தடுப்பூசி கண்டறியப்பட்டால் அனைத்து நாடுகளுக்கும் சமமாக வழங்க பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தல்

கொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அதனை வழங்க வேண்டுமென உலக நாடுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தி உள்ளார். இதேபோல் மேலும் 7 நாடுகளின் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட மருந்துகள் மீது உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் மனிதர்களிடம் 3ஆம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு விரைவில் முடிவு வெளியிடப்படவுள்ளது.

corona,vaccine,nations of the world,can save lives ,கொரோனா, தடுப்பு மருந்து, உலக நாடுகள், உயிர்களை காக்கலாம்

இந்நிலையில், வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அதனை அளிக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ராம்போசா, ஸ்பெயின், நியூசிலாந்து, எத்தியோப்பியா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடுகளுக்கு இடையே வேறுபாடு காட்டாமல் அனைத்து நாடுகளுக்கும் மருந்து அளிக்கப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ட்ரூடோ, அனைத்து நாட்டு மக்களுக்கும் வேறுபாடு இல்லாமல் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் உயிர்களை காக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|