Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கைதியின் கட்டுப்பாட்டில் சிறை மருத்துவமனை; அதிர்ச்சி குற்றச்சாட்டை எழுப்பிய முன்னாள் மேஜரின் மனைவி

கைதியின் கட்டுப்பாட்டில் சிறை மருத்துவமனை; அதிர்ச்சி குற்றச்சாட்டை எழுப்பிய முன்னாள் மேஜரின் மனைவி

By: Nagaraj Mon, 24 Aug 2020 10:41:19 AM

கைதியின் கட்டுப்பாட்டில் சிறை மருத்துவமனை; அதிர்ச்சி குற்றச்சாட்டை எழுப்பிய முன்னாள் மேஜரின் மனைவி

மரணதண்டனை கைதியின் கட்டுப்பாட்டில் சிறை மருத்துவமனை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வாவின் கட்டுப்பாட்டில் சிறை மருத்துவமனை இருப்பதாக மேஜர் அஜித் பிரசன்னவின் மனைவி சுதர்மிகா விஜரத்ன குற்றம் சாட்டினார்.

சிறை மருத்துவமனை துமிந்தா சில்வாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சில மருத்துவர்கள் அவரது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதாக மருத்துவமனையின் மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறினார்.

charge,execution arrest,prison hospital,restraint ,
குற்றச்சாட்டு, மரணதண்டனை கைது, சிறை மருத்துவமனை, கட்டுப்பாடு

துமிந்தா சில்வாவைப் பிடிக்காத நோயாளிகளை சிறை மருத்துவமனையில் இருந்து அகற்ற மருத்துவர்கள் கூட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருமாறு அதிகாரிகள் அவரிடம் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மற்றும் வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து ஊடக சந்திப்பை நடத்திய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன ஜனவரி 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags :
|