Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 17ம் தேதி முதல் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்

வரும் 17ம் தேதி முதல் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்

By: Nagaraj Wed, 15 June 2022 5:37:41 PM

வரும் 17ம் தேதி முதல் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம்

இலங்கை: வரும் 17ம் தேதி முதல் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என்ற தகவல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் எனவும் அனைத்து பஸ் உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலக நேரிடலாம் என்றும் அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

diesel,shortage,sri lanka,transport board,private service,parking ,டீசல், பற்றாக்குறை, இலங்கை, போக்குவரத்து சபை, தனியார் சேவை, நிறுத்தம்

20% தனியார் பேருந்துகள் (4,000) இன்று (15) மற்றும் வியாழன் (16) ஆகிய இரு தினங்களில், நாடு முழுவதும் இயங்கும் எனவும் கையிலுள்ள எரிபொருளைக் கொண்டு பேருந்துகளின் எண்ணிக்கை 3,000 ஆக மட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர், வெள்ளியன்று பேருந்துகள் சேவையை முன்னெடுக்க முடியாது என தெரிவித்தார்.

அரசாங்கத்துடனோ அல்லது வேறு எந்தக் கட்சியுடனோ பிரச்சினைகள் இல்லை எனவும் தற்போதைய எரிபொருள் நெருக்கடியே பிரச்சினை என்றும் குறிப்பிட்ட அவர், இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு இது தொடரும் என்றும் அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் போதியளவு டீசல் விநியோகிக்கப்பட்ட போதிலும் நேற்று முன்தினம் டீசல் வழங்கப்படவில்லை என்றார்.

Tags :
|