Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்தில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

இந்த மாவட்டத்தில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 06 Dec 2022 7:12:09 PM

இந்த மாவட்டத்தில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் : தமிழகத்தில் அரசு துறையை தொடர்ந்து தனியார் துறைகளும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதில் ஆர்வம் காட்டி கொண்டு வருகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் கடந்த ஒரு வருடங்களில் மட்டும் ஏராளமானோர் பல முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்று பணியாற்றி கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்கும் பொருட்டு தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

private employment camp,thiruvarur ,தனியார் வேலைவாய்ப்பு முகாம் ,திருவாரூர்

இதனை அடுத்து இது பற்றி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அத்துடன் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளோம்.

அந்த வகையில் வரும் 18ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்டத்தில் அமைந்துள்ள அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Tags :