Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவாரூர் மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Mon, 05 Dec 2022 3:07:33 PM

திருவாரூர் மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் : இது தொடர்பாக ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் வெளிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாரில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் விர்ச்சு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 18.12.2022 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பாரத் கல்வியியல் கல்லூரி, அம்மையப்பனில் நடைபெற உள்ளது.

இதனை அடுத்து விருப்பமுள்ள 18 வயது முதல் 35 வயது வரையுள்ள காது கேளாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் https://docs.google.com/form///1FAIpQLScmwJBodciarpXu1BsSvRLbZHgyosO714a33GiSkUs7ZgQI4g/viewform?usp=pp_urlஎன்ற Google Link-ல் முன்பதிவு செய்திடலாம்.

private employment camp,thiruvarur , தனியார் வேலைவாய்ப்பு முகாம் ,திருவாரூர்

மேற்காணும் முகாமில் தொழிற்பயிற்சியில் சேர / கடனுதவி பெற விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும், திருமணம் செய்துகொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருவாரூர் லயன்ஸ் சங்கம் மூலம் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதால் அவர்களும் அந்த முகாமிலேயே தங்களது விபரங்களை பதிவு செய்துகொள்ளலாம்.

எனவே , மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு திருவாரூர் மாவட்டத்திற்குள் தனியாரில் வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

Tags :